Monday, 16 April 2012

                                  காமத்துப்பால்!


உறைந்த குளிரில் 
உடைக்கப்பட்ட முத்தத்தின் வெப்பத்தில் 
உணர்வுகள் யாவும் உயிரில் பதிவிடப்பட..

கபாலத்தில் இறங்கும் 
காதலின் வார்த்தைகள் போதையோடு பாய..

அணைப்புகளின் இறுக்கத்தில் 
அலைபாயும் காமத்துப் பால்
நரம்புகளில் மழையாய்!



M. AL-AMEENUL THASNEEN, B.Lit., M.A.(JMC), PGDCA., 12/172, KUNTRU VILAI, MANAVALAKURICHI POST, KANYAKUMARI DISTRICT - 629252. Cell: +919944440586, +919080055880, Email: manavai_ameen@yahoo.com, manavaiameen09@gmail.com, Website: http://manavaiameenkavithaikal.blogspot.com 

Saturday, 14 April 2012





              எதிரொலி!


அரக்க கரும் நிழலொன்று
தன் காலணி அணியா வெறுங்காலால்
மணலை இழைத்துக் கொண்டு வருவது போல
மரணத்தின் மாயத்திற்குள்ளிருந்து விடுபட்டு
கல்லறையிலிருந்து உயிரோடு எழும்பி
வந்தான் அவன்!

ஓவியனின் முடிவுறாத ஓவியத்தை
மெல்லிய கண்ணாடி வழியாகப்
பார்ப்பது போலிருந்தது - அவனின்
முகமும் உடலும்!

நெற்றியிலும் புருவங்களிலும்
வேடிக்கையானதொரு கோடு
பூமியதிர்வின் சாம்பலழிந்துப் போன
கோட்டைகளில் பூசப்பட்டிருப்பது போலவும்
கண்களுக்கு கீழும் கன்னக்குழிகளிலும்
மண்ணின் நீலம் பாரித்திருந்தது.

அவனது சொற்கள் தன் வலியையும்
இன்பத்தையும் தாகத்தையும் பசியையும்
சொல்லி வெளிப்படுத்தும் விலங்கொன்றின்
ஒலிகளை ஒத்திருந்தது.

மரண இருட்டைப் பூசிய அவனது முக்காட்டை
யாரோ ஒருவன் விலக்கியதும்
நிகழ்வின் முழு அழகும் அமைதி குலைந்து
உண்மை திரை விலகி அம்மணமாய் நிற்க
உயிர்த்தெழுந்தவன் மர்மப் பார்வையில்
சூரியனைப் பார்த்து உரக்கச் சிரித்தான்.

மரணத்திற்கும் வாழ்விற்குமிடையே
பாலமாய் வந்த அவனின் அசட்டை
அலறல்களைக் கண்ட மனிதர்களின் முகம்
கல்லறைக் குழிகளின் அழுகலைத் தின்ன
வேர்களை அனுப்பி விட்டு கல்லறைகளின்
மேல் குவிந்து நிற்கும் சைப்ரஸ் மரங்கள்
அமைதியான அந்தியில் தங்களது
ஊசிமுனை உச்சியினால் வானத்தைத்
தொடுவதற்கு வீணாக முயல்வது போல்
சோகம் கப்பி இருண்டு போனது.

அவனோ..கல்லறையில் தான் அனுபவித்த
காதலின் வலியிலிருந்தும் நெடும் பிரிவிலிருந்தும்
மீளச்செய்ய இப்புவியில் போதியளவு
அன்பு இல்லையென உணர்ந்து மீண்டும்
கல்லறை நோக்கி ஓடத் துவங்கினான்.

அவன் சென்ற சாலைகள் எங்கும்
இதயங்கள் சிதறிக் கிடந்தன..
காதல் பீறிடும் இரத்தத்தின் சத்தத்திற்கு
பாலைவனம் தந்த எதிரொலி மட்டும்
அழுதுக் கொண்டேயிருக்கிறது.

- மணவை அமீன்


நன்றி,

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=19356%3A2012-04-11-14-16-02&catid=2%3Apoems&Itemid=265

கீற்று,

இணையதளப் பத்திரிக்கை.

Friday, 30 March 2012


M. AL-AMEENUL THASNEEN, B.Lit., M.A.(JMC), PGDCA., 12/172, KUNTRU VILAI, MANAVALAKURICHI POST, KANYAKUMARI DISTRICT - 629252. Cell: +919944440586, +919080055880, Email: manavai_ameen@yahoo.com, manavaiameen09@gmail.com, Website: http://manavaiameenkavithaikal.blogspot.com 

   

                   அரியாசனங்கள்!

மனைகளாய் விரிந்துக் கிடக்கிறது 
பயிர் விளைந்த பூமியின் மிச்சங்கள்!
பாரம் ஏற்றப்படும் கற்களில் உடைந்துக் 
கிடக்கிறது மலையொன்றின் தொன்மங்கள்!
வாகன நெருக்கத்தில் சதைப் பிளந்து 
காட்சியளிக்கும் சாலைகளினிடையே
மண்டையோட்டின் ஓவியங்கள்!
குடிநீர் இல்லாத போதும் வெட்டுருவிற்கு
பாலூற்றும் அடிமைகளின் அணிவகுப்பில் 
எத்தனையோ நடிகர்களின் அரியாசனங்கள்!
போதை வருமானமும் செரிமானிக்காத
ஊழல் உணவிலும் வேதாந்தம் பேசும் 
அரசியல் வியாதிகளாய் உலக வங்கியின் 
கடன் சுமைகள்!
எலும்புக்கூடுகளில் விலைவாசியின் 
கல்வெட்டுக்களை செதுக்கிக் கொண்டிருக்கும் 
உழவர்குல நடை பிணங்கள்!
நாட்டின் சாபக்கேடாய் முதுகெலும்பொடிந்த
எழுத்தாணிகளின் படிமக்கூறுகள்!

Tuesday, 1 November 2011


M. AL-AMEENUL THASNEEN, B.Lit., M.A.(JMC), PGDCA., 12/172, KUNTRU VILAI, MANAVALAKURICHI POST, KANYAKUMARI DISTRICT - 629252. Cell: +919944440586, +919080055880, Email: manavai_ameen@yahoo.com, manavaiameen09@gmail.com, Website: http://manavaiameenkavithaikal.blogspot.com 

                                                                 நன்றி மறவா..!



                                                           பேச வேண்டுமென
                                                           நினைக்கும் வார்த்தைகள்..
                                                           உள் மடங்கி
                                                           குறைப்பிரசவமாய்!


                                                           ஜீரணிக்க முடியா
                                                           நிகழ்தலில்..
                                                           காதலுக்கான
                                                           குறியீடுகள்!

                                                           கவிதையின் உப்பில்
                                                           உள்ளளவும்
                                                           நன்றி மறவா
                                                           கண்ணீர் படிமங்கள்!!!

                                                நன்றி; 
                                    மனசு, எதிர்நீச்சல், காலக்கட்டம், முதற்சங்கு,

Thursday, 15 September 2011


அழுகையின் உருவகத்தில்..!


என்ன பதில் மொழிவதென தவிக்கும் 
விளிம்பு நிலை விரிசலின் தடயங்களில்
ஏதேனும் மார்பு அகப்பட்டிருந்தால்
கண்ணீர் கரைசல்
படிமக் காடு படர்ந்திருக்கும்.

வார்த்தைகளின் உயிரோட்டத்திலே
உயிர் பிரிந்து சென்றிருக்கலாம்..

ஏதோ ஒரு அழுகையின் உருவகத்தில்
அரவணைத்திட அறியாதொரு
அழகியலின் தொன்மம்
கரைந்துக் கொண்டிருக்கிறது.



நன்றி..
எதிர்நீச்சல்-த.மு.எ.க.ச,
முதற்சங்கு.


                      தூசு தட்டப் படுகிறது!


படிந்துறைந்த பாசிப் படலத்தின் 
பச்சைப் பசேல் பளிங்கு நிறமற்ற
மனதின் பதிவுகளில்
ஆசுவாசப் பட்டுக் கொள்ள முடிகிறதெனினும்..

வழுக்கல்கள் நிறைந்த அனுபவ படிகளில்
அடிக்கடி எச்சரிக்கை எழுப்பும்
பாதங்களின் ஏற்ற இறக்க தொனியில்..

யாரோ ஒருவரின்
இருப்பு - தூசு தட்டப் படுகிறது..!

கரையான் அரித்ததை விட
கவலைகளே துரு பிடித்திருக்கிறது!!!
நன்றி..
எதிர்நீச்சல், 
த.மு.எ.க.ச.
முதற்சங்கு.

Thursday, 8 September 2011



சிலாபம்!



கால்கள் சகதியில் சிக்கி
விழி பிதுங்கி நிற்கிறது-
கொக்கு ஒன்று!

இறக்கை அடிக்கும் ஓசைகள்
காற்றில் குறியீடுகளாக..!

அலகினை சகதியில் புதைத்து
கால் சிக்கலெடுத்து இறக்கை
விரிக்க முற்பட்டும்
மூச்சுக் குழாயின்
முக்கல்களும்..முனகல்களும்..!

பார்வையாளர்கள் உணரவில்லை..
கொக்கின் அவஸ்தை!

வந்த வரை லாபமென
கண்ணிப் போட்டு கடத்தும்
கூட்டமொன்று!..
இருக்கும் வரை யோகமென
கல் விட்டு எறியும்
கூட்டமொன்று!..

திடீரென..
குறியீடுகளின் திசை நோக்கி
அயல் தேச ராஜாளியொன்று
எச்சமிட்டுச் சென்றது.

கூட்டங்கள் கூட்டுக்குள் ஒடுங்கின.

நிலமெங்கும் நிர்மூலங்கள்
நீலம் பாவித்துக் கொண்டிருக்க..

கொக்கின் தொன்மங்கள்
எங்கோ ஒரு ஆழியில்
சிலாபம் செய்கிறது!!!